Friday, December 31, 2010

சந்தல் படுகொலையும் ஜீரோ டிகிரி சிந்தனையும்

சந்தல் படுகொலையும் ஜீரோ டிகிரி சிந்தனையும் …

*********************************************************************************
கொஞ்ச நாட்களுக்கு முன்பு எனது நண்பன் ஒருவன் ஒரு வரலாற்று கதை சொன்னான் . அதை உங்களிடம் பகிரலாம் என தோணுது.
ஒரு நாள் முழுவதும் புலம்பி கொண்டிருந்த அந்த கதையின் சுருக்கம் இது.
சந்தல் tribal revolt பற்றி அவன் எனக்கு கூறினான், அவன் ஏதோ ஒரு டுபாகூர் புத்தகத்தில் படித்தானாம், அந்த புத்தகத்தில் சந்தல் Revolt பற்றி ஒரு சிறு குறிப்பு வந்ததாம், பின்பு அதை பற்றி அவன் மேலும் படித்ததை என்னிடம் கூறினான்,
எனக்கு துளி கூட அந்த கதையை நம்பமுடியவில்லை.

சந்தல் என்பவர்கள் வட இந்தியாவில் வாழும் ஒரு பழங்குடினர், அவர்கள் பிரிட்டிஷ் நம்மை ஆண்ட பொழுது பிரிட்டிஷ் சர்க்கார் ஆதரவு ஜமிந்தார்களின் அடக்குமுறைக்கு எதிராக போராடிவந்தர்களாம்.
( பழங்கிடியினரின் நிலத்தை அபகரிக்க, ஜமிந்தார்களும் , பிரிட்டிஷாரும் கூட்டாக செயல்பட்டனர் )
இந்த சந்தல் பழங்குடியினர்களை அடக்குவதற்காக இந்த ஜமிந்தார்கள் பிரிட்டிஷ் ராணுவத்தை கொண்டு பழமையான போர் கருவிகளுடன் போருக்கு வந்த இந்த சந்தல் மக்களை துப்பாக்கி, பீரங்கி கொண்டு கொன்று குவித்தார்களாம்.
இந்த சந்தல் revolt 30 June 1855 நடந்ததாம். இந்த அடக்குமுறையில் 10,000 க்கு மேற்பட்ட அந்த பழங்குடியினர்கள் கொல்லப்பட்டு, பெண்கள் மானபங்க படுத்தப்பட்டு, ஒரு Genocide போல திட்டமிட்டு வன்முறை செய்தார்களாம்,
( பழங்குடியினரின் வீரத்துக்கு முன் எதிரிகளால் தாக்கு பிடிக்க முடியவில்லை. எனவே தந்திரத்தை பயன்படுத்தி அவர்களை வென்றனர் )
இது தான் அவன் சந்தல் Revolt பற்றி படித்த விபரம்.
மேலும் அவன் படித்த புத்தகத்தில் சந்தல் Revolt என்ற ஒரு வார்த்தைதான் இருந்ததாம், அதை பற்றி மேலும் மேலும் படித்தபோது மிகவும் வேதனை அடைந்தானாம்.
ஒரு வேளை அந்த புத்தகத்தில் இந்த கொடூரங்களை பற்றி எழுதியிருந்தால் கூட அவன் இந்த வேதனையும், சிந்தனை மாற்றமும் வந்திருக்காதாம். மேலும் இந்த சந்தல் மக்கள்தான் 1967 ஆம் ஆண்டு Naxalbari என்ற மேற்குவங்க கிராமத்தில் நிலசுவந்தர்கள் மீது நடந்த ஆயுத போராட்டத்தில் போராடினர்களாம். இதுதான் பின்பு Naxalite இயக்கமாக மாறியதாம்.
நான் அவனிடம் சில கேள்வி கேட்டேன், . நான் கேட்டது.
1 இந்த சந்தல் Revolt 1857 சிப்பாய் கலகத்திற்கு முன்பு நடந்திருக்கிறது அதாவது 1855 ஆம் ஆண்டு. 10000 உயிர்களை தங்களின் சுதந்திரத்திற்காக பலி கொடுத்த இந்த கலகம்தானே உண்மையான முதல் சுதந்திர போர், பின்பு ஏன் அந்த சிப்பாய் கலகத்தை முதல் சுதந்திர போர் என்று நாம் படிக்கின்றோம் ?
2 இந்த கதை உண்மை என்றால் அன்றைய / இன்றைய இந்தியாவில் எந்த தாக்கமும் இந்த Genocide ஏற்படுத்தவில்லையா?
உங்களுக்கு தெரிந்தால் பதில் சொலுங்கள். இந்த கதை ஒரு கட்டு கதைதானே?

சந்தல் கதையை எனக்கு சொன்ன நண்பனிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு என்ன பதில் சொன்னான் என்று யாரும் பின்னூட்டங்களில் கேட்கவில்லை. ஆனாலும் நண்பன் சொன்ன பதிலை இங்கு தருகிறேன். அவன் நான் கேட்ட இந்த கேள்விகளை சமுகத்தில் உள்ள பலரிடம் கேட்டானாம்… அதற்கு அவன் கிடைத்த பதிலையும் எனக்கு சொன்னான். இந்த சந்தல் கலகம் அன்றைய இந்தியாவில் எந்த பதிப்பும் ஏற்படுத்தவில்லை.சிதறிக்கிடந்த இந்தியாவை இந்த 10000 உயிர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து ஒன்றுபடுத்தவில்லை, உயிர் பலி அதிகம் என்றாலும் எந்த சம்ப்வம் அப்படி ஒன்றும் அன்றைய இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை .எனவே இந்த கலகம் சுதந்திர போரட்டத்தின் முதல் போர் என்று சொல்லமுடியாது. இந்த Genocide ஏன் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை?
ஒரு communist சொன்னானாம் : ”.இது அன்றைய உயர் சாதி முதலாளித்துவ தலைவர்களின் சதி, அவர்கள்தான் இதை பற்றி மறைத்துவிட்டார்கள் ”
ஒரு அறிவியல் மாணவன் சொன்னானாம் "Survival Of the Fittest".
ஒரு ஊடகக்காரன் சொன்னானம் " அந்த காலத்தில் இப்போது போல media coverage இருந்திருக்காது .
அரசியல்வாதி சொன்னானாம் ”இது அன்றைய காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி ”
ஒரு தத்துவவாதி சொன்னானாம் ”இந்த Genocide மட்டும் அல்ல எந்த genocid உம் பாதிப்பு ஏற்படுத்தாது, ஏன் என்றால் ஒவ்வரு மனிதனும் ஒரு தொடர்பில்லாத உயிரினம், ஒருவரது வலி மத்தவரது வலி அல்ல, மத்தவரது மரணம் என்றும் என்னொருவனது மரணம் ஆகாது ” மேலே சொன்ன காரணங்கள் எல்லாம் சரியா தவறா என்று தெரியாது. ஆனால் தன்னை பொறுத்தவரை, அன்று வாழ்ந்த மனிதர்களும் சரி, இன்று வாழும் மனிதர்களும் சரி, அனைவரது செயல்களும், அதை தீர்மானிக்கிற அவர்களது சிந்தனையும் சரி, அந்த சிந்தனையும் தீர்மானிக்கிற பார்வையும் சரி எல்லாம் ஒரு குறுகிய கோணமாக இருக்கிறது.எந்த அளவு குறுகியது என்றால் "ZERO DEGREE" அளவு. ஜீரோ டிகிரி அளவு கோணம் எப்படி இருக்கும் ஒரு புள்ளியாய், அசைவற்று ஒரு கோட்டில் பயணித்தபடி இருக்கும். இந்த ஜீரோ டிகிரி மனசும் அந்த ஜீரோ டிகிரி சிந்தனைதான் .தனது குழந்தையை மட்டும் குழந்தையாய், தனது மதம், தனது கருத்து, தனது சாதி மட்டும் தனது சொத்தாய் சுயநலமாக வாழ வைக்கிறது. இந்த சுயநல சொத்தின் மீது எப்போது சேதம் ஏற்படுகிறதோ அப்போது மட்டும் நம் உணர்வுகள் தாக்கப்படுகின்றன, அப்போது நாம் ஆற்றும் எதிர்வினைகளால் அதை சரித்திரம் ஆக்கிவிடுகின்றோம். இந்த சரித்திர மறுப்பு, மறைப்பு அந்த 10000 உயிர்களுக்கு, Rwanda, sarajevo, Jews, Armenia, illanga, ஆர்த்திக்கு, அவந்திகாவிற்கு, .. என அனைத்துக்கும் நாம் தான் காரணம், நமது ஜீரோ டிகிரி பார்வை, சிந்தனை, செயல் தான் காரணம். அதற்கு நாம் பொறுப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறினான் எனது நண்பன். அந்த பொறுப்புதான், மனிதனை மனிதன் கொல்லகூடாது எனபது, என்னால் மனிதர்களை கொல்லமுடியாது என்றாகும், அதுதான் பிறகு மனிதனை மனிதன் கொல்லவே முடியாது என்றாகுமாம். இந்த ஜீரோ டிகிரி சுயநல சொத்தினால்தான் 10000 பழங்குடியினரின் உயிர் இந்தியாவை ஒன்று சேர்க்காமல், பன்றி கொழுப்பும், மாட்டு கொழுப்பும் ( 1857 சிப்பாய் கலகம்) ஒன்று சேர்த்தது, இந்த ஜீரோ டிகிரி சிந்தனையால்தான் இந்தியாவில் நடந்த இந்த Genocide பற்றி நாம் முக்கியம் கொடுத்து பேசுகிறோம், இந்த காரணம்தான் ஒரு சாதி தலைவரின் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தால் மனிதர்களின் தலை நிலத்தில் வீழ்கிறது, இந்திரா காந்தி சுட்டு கொன்றபோது சீக்கியர்களை கொன்று குவித்தனர், இந்த ஜீரோ டிகிரி மனதால் எது moral/ எது immoral , எது காதல் / எது காமம் என்று குழம்பி கடகின்றோம். ஜீரோ டிகிரி குறிகிய கோணம்மென்றால், நமது கோணம் எவ்வளவு டிகிரி அகலபடுத்தமுடியும்? 360 degrees. அதாவது ஒரு வட்டம். 360 = 3 + 6+ 0 =9. நமது பார்வை 360 degrees வரை அகல தயாராக இருந்தால் மட்டும்தான் , நமது படிப்பு, நமது மதம், நமது கோட்பாடு, நமது செயல், நமது தத்துவங்கள் நமது அற நூல்கள் நமது வட்டத்தின் ஆரத்தை அதிகபடுத்தி இந்த உலகம் வரை, இந்த பிரபஞ்சம் வரை பெரிதாக்கும். இந்த கருத்தை practical செய்து பார்க்கவிரும்புவர்கள் இந்த website க்கு சென்று swap angle ஐ 0 முதல் 360 வரை மாற்றி பார்க்கவும். http://jsdraw2d.jsfiction.com/demo/circleellipse.htm Width:, Height:, Start Angle(degree):, Swap Angle(degee): இது எனது தனிப்பட்ட தற்போதைய கருத்து, இது எனது அனுபவம், அறிவு என்ற நீளம் அகலம் சார்ந்து இருக்கும் , இதுதான் கருத்து என்றில்லை. எனக்கு இது மாறலாம். இப்படி என்னால் ஜீரோ டிகிரி நாவலை படிப்பதற்கு முன்பு கண்டிப்பாக சிந்தித்திருக்க முடியாது.

No comments:

Post a Comment