Thursday, March 3, 2011

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது தேவதேவன் கவிதை ஒன்று

உடற்பயிற்சி ஆசிரியர்

கடவுள் ஒருநாள்
உடற்பயிற்சி ஆசிரியரைப்போல
எல்லாமனிதர்களையும்
ஒரு நெடிய வரிசையாய் நிற்க வைத்தார்

அப்புறம்
ஒரு நீண்ட கம்பியை
வட்டமாக வளைப்பதுபோல
முதல் மனிதனையும்
கடைசிமனிதனையும்
அடுத்தடுத்து வரும்படி
அவ்வரிசையை
ஒரு வட்ட வளையமாக்கினார்

தோதான வெற்றுக்கைகள் கொண்டு
கைகள் கோர்த்துக்கொள்ளச்செய்தார்

அக்கணம்
ஒரு மின்சாரம் இயக்கியதுபோல
பற்றிக்கொண்டது அந்த மகிழ்ச்சி
அத்தனை முகங்களையும்

தேவதேவன் Poet

No comments:

Post a Comment