Saturday, March 17, 2012

காவல் கோட்டம் - Update 3

காவல் கோட்டம் - Update  3

 களவை சரி தவறு என சொல்லாது, தீர்ப்பிடாது களவுக்கதை செல்கிறது.  மாயாண்டி ஒரு மிக தேர்ந்த களவுக்காரன், அவனது ஒவ்வரு அவதானிப்பும் மிக நூட்பமான முறையில் சொல்லப்படுவதை மிகவும் ரசித்தேன்.  சின்னான் திறமைசாலி ஆனால் அவனது பதற்றம் அவனை நிபுணத்துவத்திற்க்கு வர விடாது தடுக்கிறது என்கிற அவாதனிப்பு வரை மாயாண்டி நமது மனதில் பதிகிறான்.
  சின்னான் பலியிடும் காட்சி வர்னனை அதில் வரும் சின்னானின் சிறு வயது நியாபகங்கள்,  நல்லய்யாவா? சின்னானா? யார் இவன்? என ஒரு வித identity crisis இருப்பதை உணர்கிறேன். சாவுக்கு பயப்படாத நல்லான் எதற்க்கு ஊரை விட்டு ஒடனும், தனது தாயிற்க்கு வாக்கு கொடுத்ததால் சொல்லமுடியவில்லை என்கிறான் சின்னான். சின்னான் ஊரை விட்டு ஒடிப்போய் தனியாக களவு செய்கிறான். நல்லான் எனும் பெயரை மாற்றி சின்னான என வைத்துக்கொள்கிறான். ஊரும், கொடி வரிசையும், பிறப்பும் மதிப்பை தரும் அந்த சூழலில் தான் யார் என சொல்லமுடியாத ஒரு பதட்டமான சுழலில் சிக்கிதவிக்கும் ஒரு திறமையான திருடன் சின்னான் எனும் நல்லய்யா.
   கண்டிப்பா இந்த உணர்வை இந்த எழுத்துக்கள் எனக்கு கொடுக்கிறது.

No comments:

Post a Comment