Thursday, March 29, 2012

காவல் கோட்டம் அப்டேட் 4 - மதுரை கோட்டை இடிப்பு

காவல் கோட்டம் அப்டேட் 4 - மதுரை கோட்டை இடிப்பு - அறிவும் - உணர்வும்
      நிறை அமாவாசை அன்று மதுரை கோட்டையை காவல் காக்கும் இருபத்தியோரு  காவல் தெய்வங்களுக்கு இருபத்தியோரு எருமைக்கெடா வெட்டி பலி கொடுத்து, கோட்டை சுவரில் இருக்கும் தெய்வங்களை வெளியேறி வருமாறு கோடாங்கி சாமியாடிகள் பூசாரிகள் ஆடிக்கொண்டுருந்தனர். ஒவ்வரு சாமியும் வெளிவரவதும் அதன் விவரிப்பும் அருமை. கற்களால் ஆன கோட்டையில் மனிதனின் கனவும் நம்பிக்கையும் வாழ்வும் பாதுகாப்பும் இருக்கிறது, மனிதன் அந்த கற்களின் மீது கணவு கான்கிறான், கட்டியெழுப்புகிறான், செதுக்கி வழிபடுகிறான், வரம் பெற விழைகிறான் ஆனால்  அது கல் அது கல்லாகவே இருக்கிறது. பறவையின் எச்சத்தில் முளைவிடும் தாவரத்தின் வேர்கள் மட்டுமே அதை உணருகிற ஆற்றல் பெற்றவை...  இப்படி மனித மனதுக்கும் அறிவிற்க்கும் இடையில் நடக்கும் போராட்டமாக  மதுரை கோட்டை இடிப்பு பற்றி பதிவு செய்துருக்கிறார்.
     இருபத்தியோரு காவல் தெயவங்கள் மதுரையை கல் கோட்டையை கொண்டு காத்து வருகிறார்கள் என்பது மக்களின்  நம்பிக்கை, இந்த கல் கோட்டையையும் மக்களின் மனக்கோட்டையும்  எப்படி உடைக்கபடுகிறது பிரிட்டிஸ் அரசால் என்பதுதான் இந்த பகுதி. ப்ளாக்பர்ன் எனும் ஆங்கில அதிகாரியால் மிக குறைந்த செலவில் அந்த ஊரின் மக்களாலே மிக கூறுகிய காலத்தில் மதுரையின் வளர்ச்சிக்காக தகர்த்து எறியப்படுகிறது மதுரையின் காவல் கோட்டை.

No comments:

Post a Comment