பெண்கள் மகிழ்ச்சியாக இல்லை – ஒரு அதிர்ச்சி கருத்துக்கணிப்பு முடிவு:

முதலில் மகிழ்ச்சி என்பது Subjective அதாவது தனிமனிதரின் விறுப்பு வெறுப்பு சம்பந்தப்பட்டது என்றாலும் இப்படி ஒட்டுமொத்த பெண்களும் மகிழ்ச்சி இல்லாது இருப்பது பற்றி எனது கருத்தை பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். அலுவலக வேலைப்பளுவா, குடுப்பத்தினரிடம் அதிகமான குவாலிட்டி நேரத்தை செலவளிக்க முடியாததா, ஆன்களா, திருமணமா, இருக்கலாம் தெரியல,
பெண்களின் உலகம் பல புதிரான சிக்கலான முடிச்சுகளை உடையது போலத்தான் தோனுது, நேத்திக்கு பிடித்து வாங்கிய பொருள் இன்றும் வாங்கி கொடுத்தால் மகிழ்ச்சி இல்லை, கேட்க்காமல் வாங்கி கொடுத்தால் சில சமயம் மகிழ்ச்சி சில சமயம் இல்லை, சில சமயம் உடை, சில சமயம் உறவு, சில சமயம் தனிமை. சில சமயம் சண்டை என விரிந்து பரந்து கொண்டு போய்கொண்டுருக்கிறது பெண்களின் மகிழ்ச்சிக்கூறுகள், அதுவும் முடிவில்லாமல், எல்லைற்று யாருக்கும் புரிந்தும் புரியாமல், இருக்கிறது. , சில சமயம் மூட் அவுட்டாகி இருப்பது கூட பெண்களுக்கு மகிழ்ச்சியை தரும் போல. அதாவது ஆணின் மகிழ்ச்சி ஒரு கட்டுக்குள்ளும் துவங்கி முடிந்து விடுகிறது போல அல்ல பெண்ணின் மகிழ்ச்சி.
பகுத்து ஆய்ந்து லாஜிக்கில் அகப்படாததுமாய் இருக்கிறது பெண்களின் உலகு. இந்த லாஜிக் உலகில் எப்படி பெண்கள் மகிழ்ச்சியாய் இருக்கமுடியும், அதை புரியமுடியும். அது ஒரு மேஜிக் போல மாயவித்தைகளை காட்டிக்கொண்டு இருக்கிறது நாம் கற்ற விஞ்சான அறிவுடன் அதை ரசிக்கமுடியுமா என இன்றய அறிவாற்றலுக்கு சாவல் விடுகிறது. கண்டிப்பாக அதை ரசிக்க தெரிந்தவனும் அதை புரியதெரிந்தவனும் இப்படி பகுத்துபார்த்து அதை ஒரு கட்டுரை வடிவல் வடிக்க தெரியாதவனாய் இருந்திருப்பான்.


இல்லாது இருப்பது ஒன்னும் ஆச்சரியமாக இல்லை என சொல்லிவிடலாமோ?
No comments:
Post a Comment