Saturday, January 19, 2013

Meta Narration - கருத்துருவாக்க திறன்


Meta Narration:
                 விஞ்சான கண்டுபிடிப்புகள், சூத்திரங்கள், கோட்ப்பாடுகள், தத்துவங்கள், சரித்திர சம்பவங்கள், இதிகாசங்கள், கதைகள், சட்டங்கள், ஒழுங்குமுறைள், பாலிசிகள்,  நடைமுறைகள், செயல்முறைகள், கொள்கைகள், இலக்கிய பிரதிகள் என இன்னும் பல பல இருகின்றன, இவை அனைத்தையும்  ஒரு மனிதனால் வரிக்கு வரி வாசித்து அதை நினைவில் வைத்து அதை பயன்படுத்துவது என்பது சத்தியமா சாத்தியமில்லாதது.   நாம் வித்வம் பெற்ற துறையில் கூட அனைத்து விசியங்களை வரிக்கு வரிக்கு நினைவில் வைத்து நாம் பயன்படுத்துவதில்லை.  இருப்பினும்  நம்மால்  நமது வேலையை செய்யமுடிகிறது, புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க முடிகிறது, நேற்று செய்த வேலையை இன்னும் செம்மையாக செய்யமுடிகிறது. இது எப்படி சாத்தியமாகிறது? இந்த கேள்விக்கு பல பதில்கள் இருந்தாலும் மனிதனின் இந்த ஆற்றலுக்கு முக்கிய காரணம், நம்மால் சுருக்கமாக புரிந்துகொள்ள முடிகிற திறன்தான். மனிதனின் வளர்ச்சிக்கு தகவல்களை, சிந்தனைகளை தொகுத்து அதை சுருக்கமாக புரிந்துகொண்டு கருத்துருவம் கொடுக்கும் திறன் மிகுந்த உதவியாக இருக்கிறது. அதாவது நம்மால் ஒரு கதைக்கு கதை செய்துகொள்ளமுடியும். பக்கமா படிச்சி அதை கருத்துருவாக்கம் செய்து கொள்ள முடியும்.  இது அற்ப்புதமான திறனே. இப்படி கதைக்கு கதை சொல்லுவதை மெட்டா நரஸைன் என்கிறார்கள். ( Meta Narration). இந்த கருத்துருவாக்கம் மனிதனுக்கு வரமா? இல்லை சாபமா?

    இந்த கருத்துருவாக்க திறன் கொண்டு உலகின் பிரச்சனைகளுக்கும்  நமது மனிதனின் சுய கேள்விகளுக்கும் பதில் கண்டுபிடிக்க முயற்ச்சி செய்தோம்.  அந்த முயற்சியில் வெவ்வேரு கருத்துருவாகம் உருவாவகின. சிலர் அதை மையபடுத்தினர், நெறிபடுத்தி காட்டினர்.  டார்வினிசம், கம்யூனிசம்,  நாத்திகம், பாசிசம், மதங்கள், பெண்ணியம்,  இன்னும் பல பல. ஒவ்வன்றும் தனது கருத்துக்களே சரியென வாதிட்டன, போராடின, கருத்துருவத்தின் மீது நம்பிக்கையை வைத்தோம், அதுவே சரியென வாழ ஆரம்பித்தோம். இந்த கருத்துக்களின் எது உண்மை,  உண்மை ஒன்றாகத்தான் இருக்கமுடியும் என்கிற நம்பிக்கையால் இந்த கருத்துக்களின் போர் இன்னும் பலமாக போராடினோம்.  கருத்துக்காக உயிர் விட்டோம், உறவுகளை இழுந்தோம், போராடினோம் வாழ்க்கையை மாற்றி அமைத்து கொண்டோம், அரசுகளை விழ்த்தினோம், புதிய அரசுகளை உருவாக்கி கொண்டோம். நாம் கொண்டுள்ள கருத்துக்களுக்காவே வாழ்ந்தோம், செத்தோம். சோ வாட்? கருத்துருவாக்கம் இயல்பு எனில் இப்படி நடப்பதும் இயல்பே, என்று இருதுவிடலாமா?சோ வாட்? கருத்துருவாக்கம் இயல்பு எனில் இப்படி நடப்பதும் இயல்பே, என்று இருதுவிடலாமா?


      எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக ஒரு கருத்துருவாக்கத்தை முன் நிறுத்தினார்கள், One Stop solution to all Problems. மனிதனின் இயல்பான கருத்துருவாக்க திறனை, சிலர் அடிமைமடுத்தினர், எனது கருத்தை ஏற்றுக்கொள் என மிரட்டினர், கருத்தை சொல்ல தகுதியை வரையெறுத்தனர், எதிர் கருத்தை சொன்னவனை கருத்தால் மடக்கி வெற்றி வெற்றி என கத்தினர். நான் படித்தவன், பெரியவன், எல்லாம் தெரிஞ்சவன்னு சொல்லிகொண்டு சம உரிமை,  நடு நிலமை, பகுத்தறிவு என சொல்லி, நான் சொல்கிறவன், நீ கேட்கிறவன்னு சொல்லிக்கிட்டுருந்தார்கள். எனது கருத்தால் உலகை திருத்திவிடலாம், விடுவேன் என நம்பிகொண்டிருந்தனர்,  இப்போ சிலர் இந்த மையமாக்கிய நெறிபடுத்தப்பட்ட கருத்துருவாக்குதலுக்கும், கருத்தை சொல்லி திருத்திவிடலாம் என்கிற நம்பிக்கைக்கும்  எதிரிப்பு தெரிவிக்கிறார்கள், இப்படிப்பட்ட கருத்துருவாக்கலும் அதன் மீது மனிதனின் உணர்ச்சிமிக்க பற்றும் நம்பிக்கையும் மனிதனை அழிக்கிறது, கருத்துருவாக்கம் கட்டமைக்கபட்வைகளே, அது வெவ்வேறு கருத்துக்களை நெறிபடுத்துதலின் விளைவே என நம்பு சிலர், இலக்கியத்திலும் இந்த கருத்துருவாக்த்தை எதிர்த்து எழுதினர். இப்படி என்னை போல கருத்தாக சொல்லவில்லை, அது எப்படி, எதிர்க்கும் ஒன்றை வைத்தே அதை பற்றி சொல்லாம்? வேறு மாதிரியெல்லவா சொல்லனும், கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான் இந்த கதையும்,  நாம் வாசிக்கும் பிரதியும் எழுத்தாளனின்  கருத்துருவாக்கம்தான் என எப்படி சொல்ல முடியும்?



             The Dictator மூவியில் சாப்ளின் சொல்வது போல We think More but we feel less, அது மாதிரி, சிந்திச்சி சிந்திச்சி எழுதாமல் உணர்ந்து உணர்ந்து எழுத ஆராம்பித்தனர், கருத்துன்னு ஒன்னு நீயா தேடி கண்டுபிடிச்சிக்கன்னு வாசகனுக்கு சவால் விட்டாரகள், காலத்தையும் இடத்தையும் குழப்பி போட்டு, கருத்தை சிதச்சி பிரதி முழுதும் தூவினாரகள், வாசிக்கும் ஒவ்வரு வாசகனும் வேறு மாதிரியான கருத்தை புரிந்து கொண்டனர், கருத்தை உள்ள வாங்கி வாசித்து அடையும் இன்பத்தை விடவும் உணர்ந்து / அனுபவித்து வாசிப்பது வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது.  இதில் முக்கியமான உணர்வு எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியான சிந்தனையோடு இருப்பதில்லை ஒரே மாதிரியான கருத்துருவாக்கம் கொண்டு இருக்கவில்லை என்பதே. உண்மை என்பது ஒரு ரிலேட்டிவ், ஒருவரின் அனுபவமே அவனை அவனாக ஆக்கிறது. மற்றவர்களின் அனுபத்தை பெறாமல் எப்படி அடுத்தவனுக்கு இது சரி அது சரியில்லை என சொல்ல முடியும் என்கிற கோள்விகளை சொல்லாமல் சொல்லியது. Don't define others let them define themselves if they want. மனிதனின் கருத்துருவாக்க திறனை நாம் அறிந்தும் உணர்ந்தும் கொண்டால் இன்றி அது நமக்குள் செய்யும் சாதக பாதக விடையங்களை அறிந்துகொள்ள முடியாது.


       ஏதோ வேகத்தில் இந்த MetaNarration பற்றி எழுத ஆராம்பித்தாச்சி, முடிக்க தெரியவில்லை, என்வே இதோடு முடிக்கிறேன். 

No comments:

Post a Comment