Saturday, August 17, 2013

மார்பை சுவைத்த மீன்கள்: மைக்ரோ கதை


மார்பை சுவைத்த மீன்கள்: மைக்ரோ கதை
                   

ஆற்றில் குளிக்க ரொம்ப பிடிக்கும், அதுவும் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த மந்தியான நேரம் குளிப்பது இன்னும் சுகம். மணி பண்ணிரண்டு சுட்டறிக்கும் வெயில், பொதி அடிக்கும் கழுதை கூட இல்லை, தலையில் துண்டை சுற்றி கொண்டு நடந்து ஆற்றை நோக்கி சென்றேன். பன்னி கத்தும் சத்தம் கேட்டு சுற்றி பார்த்தேன், பொதுவா இந்த இடத்தில் பன்றி கிடையாது, எங்கிருந்து வருதுன்னு பார்த்தா ஒரு ஆள் பன்னி போல கத்தி வாந்தி எடுத்து கொண்டிருந்தான், அதுவும் சிறு குட்டைக்குள். வாந்தியெடுப்பதும் அந்த வாந்தி கலந்த குட்டை தண்ணிரில் முழ்குவதுமாக இருந்தான், சிறுது நேரம் அங்கு நின்று வேடிக்கை பார்த்தேன், அந்த சிறு குட்டை இப்போது அவனது வாந்தியாகவே இருந்தது, இருந்தும் அதிலிருந்து வர முடியாமல் அந்த தண்ணிர்க்குள் பன்றி போல கத்தி கொண்டிருந்தான். மெதுவாக நடந்து ஆற்றை அடைந்தேன், அருமையான குளிப்பு, குளுமையான நீர் உடலை சிலிர்த்தது, காலை சிறு மீன்கள் சுறு சுறுப்பாக கடித்து சுத்தம் செய்தன, சில மீன்கள் தைரியமாக மார்பின் நூனியை சுவைத்தன, சிலிர்த்தது உடல், இதயம் கணிந்தது இந்த உலகமே நல்லதாக தோன்றியது, சிலிர்ப்பை கொடுத்த அந்த கெண்டை மீனுக்கு முத்தம் தர முடியாத ஏக்கம் தாக்க. ஃப்ரி ஸ்டையிலில் இரு ரவுண்ட், பட்டர்ஃப்ளை ஸ்டையிலில் ஒரு ரவுண்ட், ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்கில் ஒரு ரவுண்ட் நிச்சல் அடித்து களைத்து ஆற்றங்கறையில் ஓய்வெடுத்து, பின் குளித்துவிட்டு வீடு திரும்பினேன்.
  வீட்டுக்கு வந்து சாள மீன் குளம்பு, காரமாக புளிப்பாக உப்பாக மேலும் சுவையாக இருந்தது, பொறிச்ச வாவல் மீனையும் சேர்த்து ரெண்டு தரம் குழம்பு ஊத்தி ஒரு தரம் தயிர் வச்சி சோறை ஒரு பிடி பிடித்துவிட்டு வெளியே வந்தேன், யாவென ஏப்பம் விட்டு முடிக்கும் போது சாவ இடம்மில்லாம இங்க வந்துதானே சாவுறானுவ,என பொண்ணாத்தாக்கா சொல்லி கொண்டு போவதை கண்டு, என்ன விசியம்னு கேட்டேன். எந்த கருமம் பிடிச்சவனோ ஆத்துக்கு போர வழியில் இருக்கும் அந்த சின்ன குட்டையில் செத்து கெடக்கா, வெளங்காதவனுவ. பன்னி சத்தம் தூரத்தில் கேட்டு அடங்கியது போல இருந்தது. வாங்கி வச்ச வெத்தலையை வாயில் போட்டு அதன் காரத்தை ரசிக்க ஆரம்பித்தேன். மார்பை சுவைத்த அந்த மீன்கள் கொடுத்த ஆனந்த உணர்வு நினைவுக்கு வர வெற்றிலை சாற்றை புளிச் என தூப்பினேன்.  மீண்டும் மீண்டும் மீன்களின் கடி நினைவுக்கு வந்து சிலிர்கிறது உடல்.

  

1 comment: