Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Friday, October 18, 2013

One Hundred Years Of Solitude: புத்தக அனுபவம் - 1

One Hundred Years Of Solitude: புத்தக அனுபவம்-1

                       கப்ரியேல் கார்சியா மார்கேஸ் எழுதிய One hundred years of solitude  நாவலை கேட்டேன், வாசிக்க சோம்பேறியாக இருந்ததால் கார் ஓட்டிச் செல்லும்  பொழுது ஆடியோ பதிப்பை கேட்டு மகிழ்ந்தேன். தொலைக்காட்சித் தொடருக்கு நிகரான கதையென சொல்லலாம். மெட்டி ஓலி  / சரவணன் மீனாட்சி போன்ற நெடுங்க கதை ஆனாலும்  கார்சியாவின் மொழி பிரவாகமும், கதையை சொல்லும் முறையாலும் இந்த நாவலை உலகின் மிகச் சிறந்த இலக்கிய பிரதிகளில் ஒன்றாக மாற்றிவிடுகிறது. மேலும் இப்படியான சிறந்த இலக்கிய பிரதி இனிமையான வாசிப்பு அனுபவத்தை தருவதாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதன் ரகசியம் கப்ரியேல் கார்சியா மார்கேஸின் மேஜிக் எழுத்துக்கள் எனச் சொல்லாம்.
                         நாவல் முதலில் விறுவிறுப்பாக சென்றாலும் இடையில் சில இடங்களில் மிக மெதுவாக செல்வது போல உணர்ந்தேன்.   இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள்- பரிச்சியம் இல்லாத பெயர்களாகவும் ஒரே மாதிரியான பெயர்களாக இருப்பதால்  பெருங் குளப்பம் ஏற்ப்படுகிறது  நமக்கு. ஒவ்வரு முறையும் யார்டா இது, இது இவனென்றால் அப்படினா அது யாரு, இவனுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் என செம டென்சனாக்கவுசெய்கிறது.
              இந்த பெயர் குழப்பத்தை   நீக்க இணையங்களில் கிடைக்கும் கதாபாத்திர பெயர் குறிப்புகள் உதவி கொண்டு வாசிக்கலாம் இன்னும் நன்றாக புரியும்.  நாவலின் பாதி பகுதியை தாண்டும் பொழுது இந்த பெயர் குழப்பத்திலிருந்து  நம்மை நாமே  விடுவிக்க முடிகிறது அல்லது நமக்கு பழகிவிடுகிறது.

                        ஒரு நாவல் எதை பேசுகிறது எதை சொல்கிறது என்பதுதான் எல்லோரின் முதல் கேள்வியாக இருக்கும். இந்த நாவலை பொருத்தவரையில் அது எதை சொல்லவில்லையென்றுதான் கேட்க்க வேண்டும் எனென்றால் அந்த அளவிற்க்கு நாவலை சமுக , சரித்திர, அரசியல், மனிதவியல், உளவியல் என பல  கோணங்களில் இந்த நாவலை அனுக முடியும். அந்த அளவிற்க்கு மேட்டர் இருக்கு. பொதுவாக இப்படி விஷயம் அதிகமாக இருக்கும் நாவல்கள் வாசிக்க சுவாரஸ்யமாக இருக்காது, அந்த சுவாரஸ்யத்தன்மையை அவரது கதை சொல்லும் விதத்தில் கொண்டு வருகிறார் தென் அமேரிக்காவில் உள்ள கொலம்பியா நாட்டைச் சார்ந்த மார்கேஸ்.
        இந்த நாவலின் முதல் வரியை பாருங்களேன் – Many years later, as he faced the firing squad, Colonel Aureliano Buendía was to remember that distant afternoon when his father took him to discover ice.
                        இதைப் போல பல வாக்கியங்கள் இந்த நாவலில் வருகிறது.   முன்று காலத்தையும் ஒரே புள்ளியில் இனைத்து எழுதும் முறை.  அதாவது  நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வைப் பற்றிச் சொல்லும்பொழுது. நாவலில் இனி வரப்போவதையும்  நடக்கும் செயலுக்கு முன்பாக நடந்ததையும் சொல்வது  - காலத்தை ஒரே தளத்தில் வைத்து பார்க்கும் முறை. இந்த நெடிய நீண்ட நாவலுக்கு சுவாரஸ்யம் தருவதில் இந்த எழுத்து முறையும் காரனம்.
                     இந்த நாவலில் காலம் முன்னுக்கும் பின்னுக்குமாக தயக்கமின்றி பயனிக்கிறது, ஆனாலும் அது மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. கதை ஒரே சீராக அதாவது கால ஓட்டம் என்கிறோமே அப்படி அல்லாமல் முன்னுக்கும் பின்னுக்குமாக சென்றுக்கொண்டிருக்கும்.  இந்த நாவலின் மையக் கரு “ தனிமை” க்கு   காலத்திற்க்கும் இடையில் உள்ள உறவை சூட்டிக்காட்டுவதற்க்காகவே கார்சியா இவ்வாறு எழுதும் முறையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.
                 
           
      யோசே அர்காடியா வெண்டியா துடிப்பு மிக்க மனிதர், இவர்  ஒரு அறிவியல் ஆர்வலர், புதிய புதிய யோசனைகள் கொண்டு புதிய வழிமுறைகளை வகுக்கும் ஆற்றல் பெற்றவர், எப்போழுதும் எதையாவது செய்து கொண்டு இருப்பார், ரசவாதத்தில் ஈடுபாடு கொண்டவர், புதிய இடங்களை கண்டுபிடிப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும்.  
          அவர் அவரது மனைவி ஊர்சுலா மற்றும் சில நன்பர்கள் குடும்பத்தோடு  யோசே தான் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊரை விட்டுவிட்டு புதிய இடங்களை நோக்கி பயணம் மேற்கொள்கிறார், அவர்களது பயணத்தின் போது, மலைகளால் சூழப்பட்டு  மிக சுத்தமான ஆறு ஓடும் இடத்தை கண்டுப்பிடிக்கிறார்கள். அந்த இடத்தில்  ஒரு ஊரை நிர்மாணிக்கிறார். அது மிக அழகாக இருக்கிறது, தூய்மையாகவும், ஒழுங்காகவும் இருக்கிறது, சாவே இல்லாத ஊராக இருக்கிறது. உலகின் மற்ற பகுதியோடு எந்த தொடர்பு இன்றி இருக்கிறது. ஊரில் உள்ள எல்லா வளங்களும் அனைவருக்கும் சம அளவில் பங்கிட்டு கொடுக்கப்படுகிறது. எல்லோருக்கும் அவர்களது உரிமை என்ன அதிகாரம் என்ன என்பது தெரிந்திருக்கிறது. யாரும் யாரையும் சுரண்டல் செய்ய தேவையில்லாது இருக்கிறது. அதற்க்கு மொகோண்டா என பெயர் இட்டு வாழ்கிறார்கள்.
          இயற்க்கையாகவே துடிப்பும் தேடல் வேட்க்கை கொண்ட யோசே அர்காடியா வெண்டியாவிற்க்கு  இந்த ஓழுங்கு வாழ்க்கை மீது சலிப்பு தட்டவே மொகோண்டோவை எப்படி உலகின் மற்ற இடத்தோடு  இனைப்பது, உலகில் கண்டுப்பிடிக்கபடும் புதிய விஞ்சான அறிவை ஊருக்கு எப்படிக் கொண்டு வருவதை பற்றிய சிந்திக்க ஆரம்பிக்கிறார்.    இதுதான் கதையின் ஆரம்பம். .
                உலகின் மற்ற பகுதியிலிருந்து முழுதுமாக துண்டிக்கப்பட்ட மெகண்டோவிற்க்கு வரும் ஒரே மனிதர்கள் ஜிப்ஸி என அழைக்கப்படும் நாடோடி கும்பல். அப்படிப்பட்ட ஒரு கும்பலின் தலைவன்தான் மில்க்கியாதேஷ். இந்த நாடோடிகள் கொண்டுவரும் புதிய கண்டுப்பிடுப்புகள் அனைவரையும் வியப்பில் ஆச்சரிப்படுத்துகிறது. யோசே அர்காடியா வெண்டியாவின் தீராத தேடல் வேட்க்கை மில்க்கியாதேஷ் கொண்டுவரும் புதிய சாதன்ங்கள் மூலம் இன்னும் வளர்கிறது. மில்க்கியாதேஷிடம்  நட்பு கொள்கிறார். வெண்டியாவின் தேடல் வேட்கை மெகெண்டோவை மற்ற உலகின் பகுதியோடு வருங்காலத்தில் இனைக்கிறது, இப்படியான இனைப்பை வெண்டியா குடும்பத்தின் வருங்கால சந்தினரும் தொடர்ந்து முயற்ச்சிக்கிறார்கள், வெற்றியும் பெறுகிறார்கள். இப்படியாக மெதுவாக மெக்கெண்டோவின் ஓழுங்கு  கலைக்கப்படுகிறது மனிதர்களிடம் தனிமை வந்து குடியேறிக்கொள்கிறது. எப்படி இது நடக்கிறது எனப்தை வெண்டியா குடும்பத்தை சேர்ந்த  ஏழு தலைமுறைகளின் வாழ்வு அவர்களது ஏற்றம், வீழ்ச்சி, மரணம் , காதல் சொல்லுவதன் மூலம் சொல்கிறார். இதுதான் கதையில் மிகச் சிறிய சுருக்கம்.

             


தொடரும்……….

Thursday, May 23, 2013

பிரஹன்னளை: மிடில் க்ளாஸ்



பிரஹன்னளை: மிடில் க்ளாஸ்
           
"பிரஹன்னளை" - மகாபார கதையில் அர்ஜீனன் காட்டில் மறைந்து வாழும் போது சூட்டுக்கொண்ட பெயர். இதை எழுதியவர், கிருஸ்ணமூர்த்தி. இவர் எனக்கு பேஸ்புக்கில் பழக்கம், பல நாட்க்கள் அவரோடு உரையாடியிருக்கின்றேன். கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் இவர் எழுத்தாளராகும் அவரது பயணத்தின் முதல் பெரிய முயற்சி எனலாம். 
  இவரது http://www.kimupakkangal.com/ பக்கத்தில் அவரது குறுங்கதைகள், சிறு கதைகளை எழுதி வருகிறார். ஆதவன் , சாரு போன்ற அல்டர்னேட் ரைட்டிங்கை தைரியமாக கையாள முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த நாவல் https://www.nhm.in/shop/100-00-0001-015-0.html தளத்தில் கிடைக்கின்றது.


Wednesday, March 27, 2013

அப்பாற்ப்பட்டவர்கள் வெற்றியின் ரகசியம்- Malcolm Gladwell



அப்பாற்ப்பட்டவர்கள் வெற்றியின் ரகசியம்- Malcolm Gladwell -. Outliers: the story of success:

      சாதாரண மனிதர்களை விடவும் வாழ்வில் எல்லா வசதி வாய்ப்பை பெற்றவர்கள், அவர்கள் தேந்தடுத்த துறையில் அசாத வெற்றி பெற்றவர்களை இப்படி அழைக்கிறார் Malcolm Gladwell -. Outliers: the story of success என்னும் புத்தகத்தின் ஆசிரியர்.
      outlier is an observation that is numerically distant from the rest of the data. இதுதான் உண்மையான விளக்கம் அந்த பதத்தை வாழ்வின் வெற்றி பெற்ற மனிதர்களுக்கு அளித்திருக்கிறார்.
       அப்படி என்ன இந்த புத்தகத்தில் இருக்கு, இவர் என்ன சொல்ல வருகிறார்னா, ஒரு மனிதன் வெற்றிக்கு திறன், கடின உழைப்பு, அயாராத உழைப்பு, சிந்தனை திறன், செயல்படும் திறன், அதிர்ஸ்டம் போன்றவற்றை தாண்டியும் சில காரணிகள் இருக்கு, அதை மேற்க்கு உலகம் பார்க்க தவறி விட்டது என்கிறார். உதாரணம் ஒருவர் மிலியனார் ஆவதர்க்கும் அவர் பிறந்த வருடத்திற்க்கும் தொடர்பு இருக்கீறது, மிக சிறந்த ஐஸ் ஹாக்கி வீரனாக, கால்பந்தாட்ட வீரனாக இருப்பதற்க்கும் அவர்கள் பிறந்த மாதத்திற்க்கும் தொடர்பு இருக்கு. சும்மா திறமை அது இது என மட்டும் சொல்லி முடிச்சிற முடியாது என்கிறார்.

உதாரணம் 1:
        உலக புகழ் பெற்ற ஐஸ் ஹாக்கி வீரர்கள் அதிகமான வீரர்கள் ஜனவரி மாதத்திலும், அடுத்து பெஃப்ருவரியிலும் அடுத்து மார்ச்சிலும் பிறந்தவர்களாக இருக்கிறார்கள். அது என்ன விஸேசம் இந்த மாதத்தில், ஜாதக பலன் கூடதலாக இருக்கிறதா, அப்படி இல்லை, இதை தெரிய பள்ளி நாட்க்களிலிருந்து எப்படி ஒரு வீரன் உருவாகிறான் என்கிற சிஸ்டத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். கனடாவில் விளையாட்டு வீரரின் வயது வரம்பு ஜனவரி 1லிருந்து கண்க்கிடப்படுகிறது, அதாவது ஜனவரி 1 1975 டு 31 டிசம்பர் 1975 வரை எப்போதும் ஒரே தகுதி பிரிவில் விளையாடுவார்கள் – ஜீனியர் /சீனியர் அப்படி, இந்த முறை தகுதி பிரிவில் எப்போதும் ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களை காட்டிலும் உடல் திறமை மற்றும் கற்றுகொள்ளும் திறம் அதிகமாக இருக்க கூடும் என்பதால் இந்த ஜனவரி மாதத்தில் பிறந்த வீரர்களுக்கு  இன்னும் சிறந்த கிளப்புகளில் விளையாட வாய்ப்பும் அதன் மூலம் கிடைக்கும் பயிற்ச்சியும் கள அனுபவங்களும் அதிகம்.
      திறமையும் தகுதியும் தாண்டி பிறந்த மாதம் எப்படியாக ஒருவரின் வெற்றியாளனாகவோ சாதாரனமானவனாக்வோ ஆக்குகிறது பாருங்கள். அப்படின்னா ஜனவரி மாதத்தில் பிறந்த எல்லோரும் ஆகனுமேன்னு கேட்க்க கூடாது. இது ஒரு உதாரணம் –சொல்ல வரும் கருத்து என்னவனில் ஒருவன் வெற்றி பெற்றுவிட்டால் ஓஹோ என தூக்கி வைத்து கொண்டாடுவது அவனின் திறமையை மட்டும் வைத்து மதிப்பிடுவது சரியில்லை, ஒருவனின் வெற்றிக்கு பின்னால் நமக்கு தெரியாத பல காரணிகள் உண்டு. இங்கு ஜனவரி மாதத்தில் பிறந்தவனுக்கு ஏற்ப்படும் சந்தர்ப்பம் டிசம்பர் மாதத்தில் பிறந்தவனுக்கு கிடைப்பதில்லை, ஏனென்றால் டிசம்பர் மாதத்தில் பிறந்தவன் எப்போதும் அவனை காட்டிலும் முதிற்ச்சி அடைந்த தகுதி பிரிவோடுதான் விளையாட வேண்டியுள்ளது. இந்த தகுதி பிரிவுகளையும் முறைகளையும் நாம்தான் ஏற்ப்படுத்தியுள்ளோம், இந்த தகுதி பிரிவு வேறு மாதிரியாக இருப்பின் இன்னும் பல வீரர்கள் உலக அளவில புகழ் பெற்றூருப்பார்கள். எனவே அவர்களில் வெற்றிக்கு நான் உருவாக்கிய சிஸ்டமும் காரணம் என்கிறார்.




உதாரணம் 2:
  • Bill Gates, Microsoft Founder : October 28, 1955
  • Bill Joy : SUN Co-Founder November 8, 1954
  • Scott McNealy : SUN Co-Founder November 13, 1954
  • Steve Jobs : Founder Apple. February 24, 1955
  • Eric Schmidt: Google & Novell CEO: April 27 1955
  • Paul Allen: Microsoft Founder: January 21, 1953
  • Steve Balmer Microsoft Founder: March 24, 1956
  • Vinod Khosla SUN Co-Founder January 28, 1955
  • Andy Bechtolsheim SUN Co-Founder September 30, 1955
             மேல காட்டப்பட்ட எல்லோரும் மிக புகழ் பெற்றவர்கள், அவர்கள் பிறந்த வருடம் 1955. சுக்கிரன் உச்சத்தில் இருந்த வருடமா? பார்ப்போம் இன்னும். இந்த வருட பலனை தெரிந்துகொள்ள சிறிது கம்பூட்டர் வரலாறு தெரியனும், 1970 வரை கம்பூட்டர் என்பது மிக பெரிய மிஸினாகவும் இருவர் மட்டும் அதனோடு வேலை செய்யமுடிய கூடியதாக இருந்ததாம், 1970ல் தான் நூற்று மேற்ப்பட்டோர் ஒரே நேரத்தில் ப்ரோக்ராம் செய்து பார்க்க முடிகின்ற நிலை உருவாகியதாம். 1970க்க் முன்பு இருந்த நிலையை வைத்து எந்த உலக தர ப்ரோக்ராமரும் உருவாகிடமுடியாது. இந்த 1955ல் லிறந்தவர்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பு முதல் முதலில் சரியான தருனத்தில் வருகிறது, சரியான தருனம் என்றால் பள்ளியில் இருக்கும்போது இல்லையெனின் கல்லுரியில் நுழையும் போது, அதாவது வாழ்வில் மிக முக்கியமான தருனத்தில் கிடைக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை அருமையாக பயன்படுத்துகிறார்கள், அதுவே அவர்களின் புகழுக்கும் இந்த சந்தர்பத்தை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதிலும் இருக்கிறது இந்த சந்தர்ப்பம் எப்படி உதவியது என சிறிது நேரம் கழித்து பார்ப்போம்.

    ஒரு துறையில் விதவம் பெற 10000 மனி நேர பயிற்ச்சி தேவையாம், அது எந்த துறையாகினாலும் சரி, சங்கிதம், இசை, தொழில் நூட்ப்பம், கலை, நடிப்பு, கம்பூட்டர் என எதுவாகினாலும். இந்த 10000 மனி நேர பயிற்ச்சி தேவை என்பதை அறியாதவர்கள் எப்படி சிறப்பை அடைந்தார்கள் என பார்த்தால் ஒவ்வரு புகழ் பெற்ற மனிதர்களின் அந்த நிலைக்கு வந்தடைந்த பாதையை கவனிக்க வேண்டும், வெறும் திறமை மட்டும் அல்ல என்கிறார் மால்கம். பீட்டில்ஸ் இசை குழுவினர் புகழ் பெறுவதற்க்கு முன்பு பல மணி நேரம் க்ளப்புகளில் வாசித்திருந்திருக்கிரார்கள் அதுவும் நான் ஸ்டாப் க்ளப் எனப்படும் க்ளப்புகளில் அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பும் அதில் அவர்கள் எடுத்த பயிற்ச்சியும் அவர்களது புகழுக்கு முக்கியமான காரணம்.
      1970அம் ஆண்டில் நூற்று மேற்ப்பட்டோர் ஒரே நேரத்தில் ப்ரோக்ராம் செய்து பார்க்க முடிகின்ற சந்தர்ப்பம் கிடைத்து பில் கேட்ஸும் மற்ற கம்யூட்டர் மில்லியனர்களும் அதில் வேலை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது அவர்களுக்கு இந்த 10000 மணி நேர பயிற்ச்சியை மேற்கொள்ள முடிவதாலேயே அவர்களால் இன்றைக்கு புகழின் உச்சியில் இருக்கிறார்கள். இப்படி சொல்லவதால் அவர்களின் திறமையையும்  கடின உழைப்பையும் குறைத்து மதிப்பிட்டதாக ஆகாது. அதையும் தாண்டி சூழலும் சந்தர்பங்களும் பயிற்ச்சியும் அவரகளது இன்றைய நிலைக்கு காரணங்களாக இருக்கிறது அதையும் நான் பார்க்க தவற கூடாது என்கிறார் மால்கம்.

Monday, December 10, 2012

கார்மேன் எங்கு இருக்கிறாள்? chicken Soup for the Soul என்கிற புத்தகத்திலிருந்து ஒரு கதை



கார்மேன் எங்கு இருக்கிறாள்?:
 சிக்கன் சூப் ஃபார் தி ஸோல் புக்கில் இருந்த ஒரு கதை
                   என் பெயர் ஆஸ்லி , எனது வயது பத்து, அறிமுகம் இல்லாதவர்களோடு அறிமுகம் ஆகி, அவர்களிடம் லிஃப்ட் கேட்டு அவர்களின் காரில் பயனம் செய்து அமேரிக்காவின் 50 மாநிலங்களையும் சுற்றி வந்த அனுபவ கதையை டிவில் பார்த்தேன். அதை போல எனக்கும் செல்ல ஆசைதான், சூழ்நிலை காரணமாக முடியவில்லை.
                   இந்த கடித்ததோடு இருக்கும் இந்த கரடி பொம்மையின் பெயர் கார்மன், அவளை எனக்கு மிகவும் பிடிக்கும், நான் கேன்சர் சர்ஜரிக்காக ஆஸ்பத்திரியில் இருக்கும்போது பரிசாக கிடைத்தது. கார்மனுக்கு அமேரிக்காவின் ஐம்பது மாநிலங்களையும் பார்க்க வேண்டும் என்பது ஆசை. அதற்க்கு உங்களின் உதவி தேவை.  அவளை உங்கள் பயணத்தோடு எடுத்து செல்லுங்கள், புதிய நபர்களை அவளுக்கு அறிமுகம் செய்து வைங்கள், அவள் எங்கு சென்றால், எந்த இடங்களில் தங்கினாள், நீங்கள் யார், அவளோடு உங்களின் அனுபங்களை பற்றீ இந்த பையில் இருக்கும் நோட்டில் விபரமாக எழுதவும், இவளை செபடம்பர் மாதம் திரும்பி எனக்கு அனுப்பிவிடுங்கள், அதற்க்கான செலவு தொகையாக ஐந்து டாலரும் இந்த பையில் வைத்துருக்கிறேன், எனது முகவரியையும் எழுதியிருக்கிறேன்.
 இப்படிக்கி உங்களின் புதிய நன்பர்கள்
         ஆஸ்லி & கார்மேன்.
         எனது மகள் கேன்சர் சிகிச்சைக்கு பிறகு மிகவும் தைரியம் இல்லாதவளாகவும், புதிய நபர்களையும் புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயக்கம் கொண்டவாளாக மாறி விட்டாள்.  இந்த உலகின் அற்ப்புதங்களை ருசிக்க தயங்கும் எனது மகளின் பொறுட்டு அவளுக்கு பிடித்தமான கார்மேன் கரடி பொம்மையை அமேரிக்க மாநிலங்களை சுற்றி பார்க்க வைக்கலாமென முடிவு செய்தோம். அவளது கரடி பொம்மை, ஒரு நோட்டு, மேலே கண்ட கடிதம், ஐந்து டாலர் காசு இவற்றை ஒரு பையில் போட்டு, ஒரு ட்ரக் ட்ரைவரிடம் கொடுத்தோம். ஆஸ்லிக்கு தானே இந்த பயனத்தை மேற்கொள்வது போன்ற சந்தோசத்தில் இருந்தாள். அந்த நாள் முதல் எப்போது கார்மேன் ஏங்கு இருப்பாள் யாரோடு இருப்பாள் போன்ற கணவும் நினைப்புதான்.  
               எனக்கு கூட எங்கே கார்மென் திரும்ப வராமல் ஆஸ்லியின் கனவும், ஆசையும் உடைந்துவிடுமோ என்கிற பயம் தொற்றி கொண்டது. மக்கள் மீதும் இந்த உலகின் மீதும் நம்பிக்கையும் இந்த உலகை எதிர்கொள்ள தேவையான தைரியத்தையும் கார்மேனின் பயனம் தரும் என்கிற எனது நம்பிக்கை சரிதானா, எனகூட சந்தேகம் வந்துவிட்டது.

      ஐந்து மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் 24ஆன் திகதி கார்மேன் வீட்டுக்கு வந்தாள். அவளின் பையில் ஏராளாமான பரிசு பொருள்களும், அவள் பயனம் செய்த விபரமும், அவளை பயனத்தோடு இனைத்தவர்களின் விபரமும், பல ஃபோட்டோக்களும் இருந்தன. இந்த ஐந்து மாதங்களில் கார்மேன் 16 மாநிலங்களுக்கு பயணம் செய்திருந்தாள். ஆஸ்லி,  கார்மேனின் பயனத்திற்க்கு உதவிய நபர்களுக்கு நன்றி சொல்லி கடிதம் எழுதினாள், சிலர் அவளுக்கு நன்பர்களாகவும் ஆனார்கள். கார்மேனின் இந்த பயணக்கதை எங்கள் ஊரில் பரவ எங்கள் ஊரின் நூறு பேர்களின் மத்தியில் அந்த பயணக்கதயை பகிர்ந்தாள் தைரியமாகவும், சந்தோஸமாகவும்.

     இந்த உலகத்தில் அற்புதஙகள் நிகழும் என்கிற சிந்தனை திறனையும், மனிதர்களின் அன்பின் மீது நம்பிக்கையும், தைரியத்தையும் எனக்கும் ஆஸ்லிக்கிம் இந்த குட்டி கரடி பொம்மை தந்தது என்பது ஆச்சரியமானதாகவே இருக்கிறது இனறு வரை. 

Sunday, December 2, 2012

Life Of Pi - வாசிப்பு அனுபவ பகிர்வு


Life Of Pi - வாசிப்பு அனுபவ பகிர்வு:



                 Man Booker Prize பெற்ற நாவலான Life Of Pi யை தழுவி எடுக்கப்பட்ட படம்.  பாண்டிச்சேரிதான் இந்த நாவலின் கதை களம். Pi - 22/7 an Irrational and mystical number, if some one interested in story of the number Pi, they can correlate with story of the Novel. . 

And so it goes with God

                                                                         The Life Of Pi படம் இன்னும் பார்க்கவில்லை, ஆனாலும் நாவல் வாசிப்பு அற்ப்புதமான அனுபவத்தை தந்தது. நாவலின் முதலில் பாண்டிச்சேரியில் வசிக்கும் Piscine Molitor எனும் 16 வயது சிறுவனின்  ஆன்மிக தேடல் சொல்லப்படும்,  Piscine Molitor என்ற பெயர் பிடிக்காததால் அதை பை (Pi 22/7) என வைத்துக்கொள்வான். அவன் ஒரே நேரத்தில் கிறுஸ்துவனாகவும், இந்துவாகவும், முஸ்லிமாகவும் வாழ ஆசைப்படுவான், அந்த மதங்களின் கதைகளை பற்றி வியப்பும் ஆச்சரியமும் அவனுக்குள் இருக்கும். இந்த கதைகள் எல்லாம் எதற்க்கு? எது உண்மை? எது பொய்? இவற்றின் தேவை என்ன? போன்ற கேள்விகளுக்கு அவனுக்கு விடை தெரியவருகிறது நாவலின் முடிவில். 227 ( Pi) நாட்கள் கடலில் பயனத்தை அவன் எப்படி உயிர் பிழைத்தான் என்பதை இரு கதைகளாக சொல்லுவான் ”பை”. 
                                                       
                                                            பாண்டிச்சேரியில் Zoo நடத்திவரும் பையின் தந்தை சூழ்நிலை காரணமாக, கணடாவிற்க்கு சென்று வாழ தீர்மாணிக்கிறார், Zooவில் இருக்கும் எல்லா மிருகங்களையும் அப்படியே கப்பலில் ஏற்றி அந்த கப்பலிலேயே அவரது குடும்பமும் செல்கிறது. நடு கடலில் கப்பல் முழ்கிவிட 227 நாட்க்கள் கழித்து பை மட்டும் கரை சேர்கிறான். அவன் அவனது Castaway அனுபவங்கள்தான் “The Life Of Pi" கதை.

                                                     அவனது கடல் பயனத்தை இரு கதைகளாக சொல்கிறான்.  முதல் கதையில் கப்பல் முழ்கிய பிறகு  ஒரு ஓரங்குட்டன், வரிக்குதிரை, கழுதைபுலி, ரிச்சர்ட் பார்க்கர் எனும் புலி மற்றும் பை ஆகியோர் ஒரு படகில் பயனிக்கும் சூழல் உருவாகிவிடுவதாகவும், இந்த மிருகங்களோடு எப்படி அவன் பயனிக்கிறான் என்பது முதல் கதை,   அறிவியல் அறிவுக்கு அப்பாற்ப்பட்ட விடையமாக சாகசகங்கள் நிறைந்த கதையாக இருக்கும், இதை அறிவியல் சிந்தனை கொண்ட இன்ஸூரன்ஸ் அதிகாரிகள் நம்ம மறுப்பார்கள், மிருங்கள் இல்லாத கதை வேண்டும் என அவர்கள் கேட்க்க அவன் இரண்டாவது கதையை சொல்லுவான், அதில் கப்பல் முழ்கிய பிறகு எஞ்சியவர்கள் அவனோட அம்மா, கண் தெரியாத ஒரு பிரஞ்ச்காரன், ஒரு சமையல்காரன், ஒரு தைவான் மாலுமி ஆகியோர் என சொல்லுவான் பின் அவர்களோடு எப்படி பயனித்தான் என்று சொல்லுவான். 
                                           
                                                        ,  முதல் கதையில் ஓரங்குட்டனையும் , வரிகுதிரையையும் கழுதை புலி சாப்பிடும், கழுதை புலியை ரிச்சர்ட் பார்க்கர் என்னும் புலி சாப்பிடும், புலியும் பையும் ஒரு படகில் 227 நாட்க்கள் ஓன்றாய் இருந்து மெட்ஸிக்கோவில் கரை சேர்வார்கள், புலி காட்டிற்க்கு ஓடி விடும். . அடுத்த கதையிலும் அப்படியே சக மாலுமி / சமையல்காரன் சேர்ந்து பிரஞ்ச்காரனை கொன்று சாப்பிடுவார்கள், பிறகு சமையல்காரன் அந்த மாலுமியையும் , பையின் அம்மாவையும் கொன்று சாப்பிடுவான், இறுதியில் பை அந்த சமையல்காரனை கொன்று சாப்பிடுவான்.  

 முதலாவது கதை நம்ம முடியாததும் சாகசமாகவும் இருக்கும், இரண்டாவது கதை கொடுரமாக இருக்கும்.

                                         இந்த இரு கதைகளையும் சொல்லிவிட்டு அவனுக்கும் இன்சூரன்ஸ் அதிகாரிகளோடு நடக்கும் உரையாடல்தான் அந்த நாவலின் கரு.
இதுதான் அந்த உரையாடல்
“You can’t prove which story is true and which is not. You must take my word for it.”
“I guess so.”
“In both stories the ship sinks, my entire family dies, and I suffer.”
“Yes, that’s true.”
So tell me, since it makes no factual difference to you and you can’t prove the question either way, which story do you prefer? Which is the better story, the story with animals or the story without animals?”
Mr. Okamoto: “That’s an interesting question…”
Mr. Chiba: “The story with animals.”
Mr. Okamoto: [translation] “Yes. [/translation] The story with animals is the better story.”
Pi Patel: “Thank you. And so it goes with God.” 
 and he Cries..........................

                                                  சாதாரான / சராசரி மனிதனின் இறுத்தலின் முக்கியமான தேவையான Belief / Hopeக்கு இடம் கொடுக்காத அறிவியல் முறை சிந்தனையை, முற்ப்போக்கு / நாத்திக வாழ்க்கை முறையை மறு பரிசிலனை செய்யும் பின் நவினத்துவ சிந்தனை முயற்ச்சி இந்த நாவல்.  

                                                இந்த கதை மேஜிக்கல் ரியலிசம் ( Magical Realism) எனும் முறையில் எழுதப்பட்டது அதாவது சாதாரன மனிதர்கள் அசாதாரன வாழ்க்கை அல்லது புலன்களுக்கு அப்பாற்ப்பட்ட சூழலோடு வாழ்வது போல அதே சமயம் எதார்த்தமாகவும் எழுதுவது. இது புராண கதை சொல்லுதல் முறை மாதிரி இருந்தாலும் சற்று மாறுதல் உடையது.


Wednesday, February 22, 2012

காவல் கோட்டம் அப்டேட் 2: நெஞ்சை கொள்ளை கொண்ட களவு !!

காவல் கோட்டம் அப்டேட் 2:  நெஞ்சை கொள்ளை கொண்ட களவு



           களவு ஒரு விசித்திர செய்கை, மீனுக்கும் பறவைக்கும் மட்டுமே தெரிந்த தடமற்ற  பயணத்தின் ரகசிய  நெடு வழி

               முந்தைய பதிவு எழுதும் போது இது சரித்திர குறிப்புகளாய் இருக்கிறது இந்த நாவல், என்ன பெரிய நாவல் என நினைதேன், அடுத்த பகுதியை வாசித்தபின் எனக்கு இந்த நாவலின் ஆசிரியரின் கதை சொல்லும் திறனின் மீது ஒரு நம்பிக்கை வந்துள்ளது. ராஜியத்தின் கதை முடிந்து விட்டது போலும், மாயாண்டியும் சின்னனும் ஒரு சில பக்கங்களில் என்னை கவர்ந்து விட்டார்கள், அருமையான் விவரிப்பு. தாராபுரம் பெரிய கோட்டை விட்டு களவு ,என்ன ஒரு விவரிப்பு, Nice Introduction. இவர்கள்தான் இந்த கதையின் நாயகர்களோ, பாப்போம். அருமை. எழுத்தின் கவர்ச்சி இங்கு டைமிங்கில் வைதுள்ளார். தெளிவான துள்ளியமான களவு விவரிப்பு. I Just felt it happening infront of my Eyes.
                 மாயாண்டி சின்னானை பின்தொடர்கிறான், மாயாண்டி அதை பார்ப்பதுபோல விவரிக்கபடுகிறது, சின்னான் ஒரு விட்டிற்க்குள் சென்றுவிட பிறகும் விவரிப்பு தொடர்கிறது, அது எப்படி சாத்தியம் என சந்தேகம் நமக்குள் எழுவது சகஜம், அடுத்த பாராவை வாசித்து நான் புரிந்தவுடன் சொன்னது WoW. 270 பக்கங்கள் வாசிப்பிற்க்கு பிறகு WOW என சொன்ன தருனம். இது இந்த நாவலின் முதல் WOW.
                தூக்கில் தொங்கும் பெண்ணிடம் திருடாமல் வந்த சின்னான் சொன்ன காரணம், சூப்பர். எதார்த்தம். பாராட்டுகள். நன்றி,  நல்லவேளை மனுதர்மம் / பாவம் /புண்ணியம் பற்றி களவுகாரன் நமக்கு புத்தி சொல்லவில்லை.
            கனவனை தீர்த்துவிட்டு வருவது, அருனாக்கொடி தாலியாவது, முதல் கனவன் தாய் மாமன் ஸ்தானத்தில் இருந்து மறுமணம் செய்து வைப்பது என, இந்த 30 பக்கங்கள் என்னை மேலும் வாசிக்க தூண்டுது.
இதை எழுதும் போது தென்மேற்க்கு பருவ காற்று படதில்லிருந்து ஏடி கள்ளச்சி என்ன தெரியலயா எனும் பாடல் தொலைக்காட்சியில். What a Timing Song. 



               நகைச்சுவை இல்லை என எழுதிய முதல்பதிவிற்க்கு மாற்றாய், சிரிந்த தருனமும் இந்த பகுதியில்தான். கொள்ளிகட்டையை அடுக்கும் வெட்டியானிடம் ஆள் சின்னாள்தாப்பா கட்டையை ஒடுக்கி கட்டு என சொல்லிபோவது Black Humor.


  Hope it will go more interesting, let us see.